தேசிய நெருக்கடி நிலைப் பிரகடனம் - National Emergency
- நெருக்கடி நிலை - அவசரகால பிரகடனம்
(Indian Emergency - 25 ஜூன் 1975 – 21 மார்ச் 1977) இந்தியாவில் 21- மாத காலத்திற்கு இந்த நிலை இந்தியக் குடியரசுத் தலைவர்பக்ருதின் அலி அகமது வால், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி பிரகடனப் படுத்தப்பட்டது
- Art.352-ன்படி போர் அல்லது அந்நியப் படையெடுப்பு அல்லது ஆயுதக் கிளர்ச்சியின் காரணமாக இந்தியா முழுவதற்குமோ, அல்லது அதன் ஏதேனும் ஒரு பகுதிக்கோ பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேர்ந்துள்ள நிலை உருவாகியுள்ளது என்ற கேபினட் தீர்மானம் பற்றி குடியரசுத் தலைவருக்கு எழுத்து மூலம் தகவல் கிடைத்து, அதில் குடியரசுத் தலைவர் திருப்தி அடைந்தால், இந்தியா முழுவதற்குமோ, அல்லது அதன் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமோ ஒர் அவசர நிலையை அவர் பிரகடனப்படுத்தலாம். அவசர நிலைப் பிரகடனங்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
- பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரகடனங்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், அப்பிரகடனம் வெளியிடப்பட்ட நாள் முதல் ஒரு மாதம் முடிவந்தவுடன் அவை செயலிழந்துவிடும்.
- பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் இன்னொரு பிரகடனத்தால் குடியரசுத் தலைவர் அதனை ரத்து செய்யாதவரை அதிகபட்சம் 6 மாதங்களுக்கு மட்டுமே அவசர நிலைப்பிரகடனம் அமலில் இருக்கும்.
- பின்னர் மீண்டும் பாராளுமன்றம் ஏற்றால் அடுத்து 6 மாத காலத்திற்கு நீடிக்கும்.
- இவ்வாறாக 3 ஆண்டுகளுக்குத் தான் இவ்வறிவிப்பை நீட்டிக்க இயலும். அவசரநிலைப் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளிக்கிற தீர்மானங்கள், அல்லது நீட்டிக்க வகை செய்யும் தீர்மானங்கள், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஆஜராகி வாக்களித்துப் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும்.
- அவசர நிலை தொடர்பான ஒரு தீர்மானம் பற்றிய அறிவிப்பை அவையின் மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்குக்குக் குறையாத உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரிடமோ சமர்ப்பித்தால் அத்தீர்மானம் பற்றிப் பரிசீலிக்க, 14 நாட்களுக்குள் அவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
- தாம் பிறப்பித்த நெருக்கடிப் பிரகடனத்தை, குடியரசுத் தலைவரே வாபஸ் பெறலாம். ஆனால் ஒன்றிய அமைச்சரவையின் எழுத்து வடிவிலான அனுமதியைப் பெற்ற பிறகே, குடியரசுத் தலைவர் இந்த நெருக்கடி நிலைப் பிரகடனத்தை அறிவிக்க இயலும்.
- இந்த நெருக்கடி நிலைப்பிரகடனத்தைப் பொறுத்த வரை குடியரசுத் தலைவரின் நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்கான காரணம், நீதிமன்றத்தின் மறு ஆய்வுக்கு உட்பட்டது.எனவேகுடியரசுத் தலைவர் இது குறித்த காரணங்களில் நீதிமன்றத்திற்குக் கட்டுப்பட்டவராவார்.
- Art.352-ல் உள்ள அவசர நிலைப் பிரகடனம் பற்றிய வகையுரைகள், 1979-ல் அமுலுக்கு வந்த 44-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 1978-ன்படி மேலும் கடுமையாக்கப்பட்டன. அவை:
- உள்நாட்டு நெருக்கடி Internal disturbances காரணத்தின்பேரில் ஜூன் 25-ல் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலைப் பிரகடனத்தால் ஏற்பட்ட மிக மோசமான அனுபவங்களை அடுத்து,
- உள்நாட்டு நெருக்கடி என்ற தெளிவற்ற சொற்களுக்குப் பதிலாக, ஆயுதக்கிளர்ச்சி -armed rebellion என்ற சொற்கள் இணைக்கப்பட்டன.
- பிரதமரின் வாய்மொழி ஒப்புதல் அல்லது அனுமதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர், அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் முறையை கைவிடப்பட்டு, 44-வது திருத்தத்தின் மூலம் கேபினட்டின் தீர்மானம் எழுத்து மூலமாக குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, அவர் நெருக்கடி நிலையை அறிவிக்க முடியும் என்பது நிபந்தனையாக்கப்பட்டது.
- அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட 2 மாதங்களுக்குள் பாராளுமன்றத்தின் இரு சபைகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்றிருந்த கால வரம்பு, 44-வது சட்ட திருத்தத்தின் மூலம் 1 மாதமாகக் குறைக்கப்பட்டது.
- 44-வது திருத்தத்திற்கு முன்னர், அவசர நிலைப்பிரகடனம், பாராளுமன்றத்தில் ஒருமுறை ஒப்புதல் பெற்ற பிறகு, கால வரையின்றி அவசர நெருக்கடி நிலை நடைமுறையில் இருக்க வாய்ப்பு இருந்தது.
- ஆனால் 44-வது திருத்தம் அதை நீக்கி, அவசர நிலையை 6 மாதம் வரை மட்டுமே நீட்டிக்க வழி செய்தது.
- 44-வது திருத்தத்திற்கு முன்பு வரை, அவசரநிலை அறிவிக்கப்பட்டு விட்டால், அதை முடிவுக்குக் கொண்டுவர பாராளுமன்றத்திற்கு குறிப்பிட்ட வரையறைகள் இல்லாமல் இருந்தது.
- ஆனால் இத்திருத்தத்திற்குப் பிறகு லஸோக் சபையின் உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில், பாராளுமன்றம் கூட்டப்பட்டு, அவசரநிலையை நிராகரிக்க வழி செய்யப்பட்டுள்ளது.
- 44-வது திருத்தத்திற்கு முன்னர், போர், அயல்நாட்டு ஆக்கிரமிப்பு உள்நாட்டுத் தொந்தரவுகள் போன்ற எக்காரணத்திற்காக (Art.352) அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டாலும்,
- Art.19 தாமாகவே செயலிழந்து விடும் என்று Art.358 வலியுறுத்தியது.(Art.19-எழுத்துரிமை, பேச்சுரிமை.)
- ஆனால் 44-வது திருத்தம், போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு ஆகிய இரு காரணங்களுக்காக அவசரநிலை அறிவிக்கப்பட்டால் மட்டுமே Art.19 தாமாகவே செயலிழக்கும் (Art.358) என்று வரையறுத்தது.
- மேலும் 44-வது திருத்த்திற்கு முன்னர், அடிப்படை உரிமைகளில் எது வேண்டுமானாலும், நிறுத்தி வைக்கப்பட இயலும் என்ற நிலை இருந்தது.
- ஆனால் 44-வது திருத்தத்தின் மூலம், அவசர நிலைப் பிரகடனத்தின்போதும் Art.20 மற்றும் 21 ஆகிய இரு ஷரத்துக்களையும் நிறுத்திவைக்க இயலாது என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டது.