டல்ஹவுசி பிரபு
- 1848-ல் டல்ஹவுசி பிரபு இந்தியாவில் பதவி வகித்த தலைமை ஆளுநர்களிலேயே
இளைய வயது உடையவராயிருந்தார்.
- இந்தியாவில் நவீன மயமாக்கலை தொடங்கி வைத்தவர் டல்ஹவுசி பிரபு
- நவீன இந்தியாவை உருவாக்கியவர் என புகழப்படுகிறார்.
- நில இணைப்புக் கொள்கை (Policy of Annexation), அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse) அறிமுகப்படுத்தினார்
- பொதுப்பணித்துறையை நவீனப்படுத்தியதால் இந்தியாவின் பொறியியல் பணித்துறைக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார்.
- ·1853-ல் டல்ஹவுசி ரயில்வே அறிக்கையை தாமே தயாரித்து வெளியிட்டார்.
- ·இந்தியாவின் எதிர்கால ரயில்பாதை கொள்கையை இதுவடிவமைத்தது.
- ·1853-ல் பம்பாயிருந்து தாணா வரை செல்லும் முதல் ரயில்பாதை இந்தியாவில் தொடங்கப்பட்டது.
- 1854-ல் கல்கத்தா முதல் ராணிகஞ்ச் வரை ரயில்பாதை போடப்பட்டது.
- 1856-ல் சென்னை முதல் அரக்கோணம் வரை ரயில்பாதை தொடங்கப்பட்டன.
- 1852-ல் ஓ ஷாகன்னசே என்பவர் தந்தி துறை யின் முக்கிய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
- இந்தியாவின்
முக்கிய நகரங்களான கல்கத்தா, பெஷாவர், பம்பாய், சென்னை போன்றவை தந்தி மூலம் இணைக்கப்பட்டன.
- ·1857-ம் ஆண்டு பெரும் கலகத்தின் போது தந்தி முறை ஆங்கிலேயருக்கு பெரும் வரப்பிரசாதமாக
உதவியது.அதன் இராணுவ மதிப்பு அப்போதுதான்
உணரப்பட்டது.தற்கால அஞ்சல் துறைக்கு அடித்தளம் அமைத்தவர் டல்ஹவுசி பிரபு ஆவார்.
- 1854-ல் புதிய அஞ்சலக சட்டம் நிறைவேற்றப்பட்டது.
- ·1854-ல் சர் சார்லஸ் உட்கல்வி அறிக்கையை வெளியிட்டார்.
உட்கல்வி அறிக்கை இந்தியாவின் அறிவுப்பட்டயம்
என கருதப்படுகிறது.
- ·தொடக்க கல்வி, இடை நிலைக்கல்வி,
உயர்கல்வி என அனைத்து நிலை கல்வி வளர்ச்சிக்கும் வழி வகுத்தது.
இதனால் கல்வித் துறைகள் சீரமைக்கப்பட்டன.
- 1857-ல் கல்கத்தா, பம்பாய், சென்னையில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.
- · டல்ஹவுசி காலத்திற்கு முன் பொது பணித்துறை அலுவல்கள், கிளை ராணுவ வாரியம் கவனித்து வந்தது.டல்ஹவுசி பொதுப்பணிக்கு தனியாக ஒரு பொது பணித்துறையை ஏற்படுத்தினார்.
- பொதுப்பணித்துறையை நவீனப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் பொறியியல் பணித்துறைக்கு
அடித்தளம் அமைத்தவர் என போற்றப்படுகிறார்.
- ரயில் பாதை மற்றும் தந்தி துறைகளின் தந்தை என்று போற்றப்படுகிறார்
- நவீன இந்தியாவை உருவாக்கியவர்
என புகழப்படுகிறார்.