திணைமொழி ஐம்பது என்பது கண்ணன் சேந்தனார் என்னும் புலவர்
பாடிய ஐம்பது அகப்பொருட் பாடல்களைக் கொண்ட நூல். சங்கம் மருவிய காலத்துத் தமிழ் நூல்
தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கியது
இது. கி.பி நான்காம்
நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
திணைமொழியைம்பதினை இயற்றிய கண்ணன் சேந்தனார் சாத்தந்தையார்
என்ற பெரியாரின் மகன் ஆவர்.
இதிலுள்ள ஐம்பது பாடல்களும் திணைக்குப் பத்துப்பாடல்களாக
அமைக்கப்பட்டுள்ளன